Wed. May 8th, 2024

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் பிரம்மாண்டமான வடிவில் கட்டப்படவுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் மேற்பார்வையில் கட்டப்படவுள்ள இந்த கோயிலுக்கான பூமி பூஜை விழா நாளை காலை நடைபெறுகிறது.

இதனையொட்டி யாக சாலை பூஜைகள் கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கோயில் கட்டுவதற்கு தேவையான 6 கிரவுண்ட் நிலத்தை பழம் பெரும் நடிகை காஞ்சனா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானம் அளித்துள்ளார். !