Fri. Mar 29th, 2024

வாட்ஸ் அப்பில் பரவி வரும் இந்த வீடியோவை பார்க்கும் போது மனசு பதறுகிறது. முதுகு முழுவதும் தீக்காயங்களுடன் காட்சி தரும் இந்த சிறுமி, எவ்வளவு வலியை பொறுத்துக் கொண்டிருப்பார்… கொளுத்தும் வெயிலில் சூரிய ஒளி பட்டாலே உடம்பு எல்லாம் எரியுமே?உடனடி சிகிச்சை வழங்கவில்லை என்றால், தீக்காயம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்து உயிருக்கு ஆபத்தாகிவிடுமே?

இந்த சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள முன்னூர் மங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏழை தம்பதிகளின் சிறுமியான இந்த குழந்தை, பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் எதிர்பாராமல் தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு முதலுதவி மற்றும் தொடர் சிகிச்சைக்கு பணவசதியில்லாததால் அவரது கிராமத்திலேயே தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை பார்த்த பிறகாவது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசின் சுகாதார துறையும் விரைந்து இந்த சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உதவி புரிய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .