Tue. May 14th, 2024

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளில் மிக,மிக அழகான ஜோடி, கரினா கபூர் – செயிப் அலி தம்பதியினர்..கடந்த 2012 ஆம் ஆண்டு கரினா கபூரும், செயிப் அலிகானும் திருமணம் செய்து கொண்டனர். செயிப் அலிகானுக்கு இது இரண்டாவது திருமணம்.
8 ஆண்டு கால இனிப்பான இல்லற வாழ்க்கையில், இந்த தம்பதிக்கு 2016 ஆம் ஆண்டில் முதல் குழந்தைப் பிறந்தது. ஆஸ்திக்கு ஒரு வாரிசு என்ற வகையில் பிறந்த ஆண் குழந்தைக்கு தைமூர் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர், கரினா கபூர் – செயிப் அலி தம்பதியினர்.

தைமூருக்கு நான்கு வயது கடந்த நிலையில், மீண்டும் கர்ப்பிணியானார் கரினா கபூர். ஆசை மகள் பிறப்பால், செல்லமாக கொஞ்சி விளையாடலாம் என்ற மகிழ்ச்சியில் மப்பும், மந்தாரமாக இருந்த கரினா கபூரை பார்த்த உறவுகள் எல்லாம், இரண்டாவதாகவும் ஆண் குழந்தைதான் பிறக்கும் என ஆசை, ஆசையாக கூறினார்கள். மகனோ, மகளோ எந்த வாரிசு என்றாலும் இறை செயல் என மகிழ்ந்து, பிரசவ நாளை எதிர்கொண்டார் கரினா கபூர்.

பூமிக்கு சிசு வருவது இறையின் கொடையால் என்பதுபோல, இன்று கரினா கபூருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வெண்பஞ்சுப் போல குழந்தையைப் பார்த்த, கரினா கபூர் பூரித்துப் போனார். ஆனந்த கண்ணீர் வடித்தார். செயிப் அலியும், ஆண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு உற்சாகத்தில் துள்ளி குதித்தார். குடும்பத்தில் புதிய வரவாக வந்த செய்தியால், ஒட்டுமொத்த குடும்பமே சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருப்பதை, கரினா கபூரின் ரத்த உறவினர் ரித்திமா கபூர், தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.