Tue. May 14th, 2024

மேற்கு வங்காளத்தில் பிரபலமான இளம் நடிகை பாமளா கோஸ்வாமி, அம்மாநில பாஜக இளைஞரணி செயலாளராக உள்ளார். கோகைன் எனும் போதைப் பொருளை அவர்பதுக்கி வைத்திருந்ததாக அம்மாநில காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவரது உடமைகளை பரிசோதனை செய்தனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள கோகைன் எனும் போதைப் பொருளை அவர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாமிளா கோஸ்வாமி மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாடல் அழகியான பாமிளா, கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தவர். மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த வழக்கில், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை கைது செய்யப்பட்டிருப்பது, அம்மாநில பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

P