Mon. Apr 29th, 2024

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன்கேரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி மத்தியில் அமைந்த 2014 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளது.

உயர்த்தப்பட்ட இந்த மோடி வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை 62 ரூபாயாகவும், டீசல் விலை 47 ரூபாயாக குறையும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதன் மூலம் உயர்ந்து வரும் விலைவாசியும் பெருமளவுக்குக் குறையும்,

2014ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை 71 ரூபாய் 51 காசுகளாகவும், டீசல் விலை 57 ரூபாய் 28 காசுகளாகவும் இருந்ததை சுட்டிக்காட்டினார்..

தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக இருக்கும் போது பேட்ரோல் விலை நூறு ரூபாயை நெறுங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.19.73 விதிக்கப்பட்ட கலால் வரியை மத்திய அரசு இன்று ரூ.32 98 காசுகளாக உயர்த்தியுள்ளதையும் குறிப்பிட்டு அவர் பேட்டியளித்தார்.