Mon. Apr 29th, 2024

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போதுஅவர் பேசியதாவது :

மக்களவை நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மாற்றுவதாக, பெண் எம்.பி.க்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

உலக நாடுகளில், நம்பிக்கை நட்சத்திரமாக, சுடரொளியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடிய முன்களப் பணியாளர் கடவுளுக்கு நிகரானவர்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு சுயசார்பு நிலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.

கொரோனா காலத்தில் நம்மைக் காத்துக் கொண்டதோடு, பிற நாடுகளுக்கும் இந்தியா மருத்துவ உதவிகள் அளித்துள்ளது.

பொருளாதாரம் உள்ளிட்டவற்றில், தமது தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது,

ஒவ்வொரு துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்ல பல சீர்திருத்தங்களை தமது அரசு செய்து வருகிறது.

கொரோனா காலத்தில், 2 லட்சம் கோடி அளவிற்கான திட்டங்கள் ஏழை-எளியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.