Mon. Apr 29th, 2024

நாடாளுமன்றத்தில் இன்று குடிரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு விரும்புகிறது. விவசாயகள் பிரச்சினைகள் குறித்து பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர். விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் தேவை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். 
விவசாயிகள் நலன் குறித்து தொடர்ந்து சிந்தித்து நடவடிக்கைள் எடுத்து வருகிறோம். குறைந்த பட்ச ஆதார விலை இருந்தது. இப்போதும் இருக்கிறது, இனிவரும் காலங்களிலும் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வேளாண் சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம். வேளாண் சட்டங்களில் குறைகள் இருந்தால் நிச்சயமாக சரி செய்யப்படும். 
ஏழைகளுக்கான குறைந்த விலை ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடரும். வேளாண் கொள்முதல் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் அழைப்பை விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

பிரதமரின் அழைப்புக் குறித்து கருத்து தெரிவித்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, சாமியுக்தா கிசான் மோர்ச்சாவின் மூத்த உறுப்பினரான விவசாயிகள் தலைவர் சிவ்குமார் கக்கா, செயதியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு  தயாராக இருப்பதாகவும், கூட்டத்தின் தேதி மற்றும் நேரத்தை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
“நாங்கள் ஒருபோதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கவில்லை. அது எங்களை பேச்சுவார்த்தைக்கு  அழைத்த போதெல்லாம், நாங்கள் மத்திய அமைச்சர்களுடன் கலந்துரையாடினோம். அவர்களுடன் (அரசு) பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கக்கா தெரிவித்தார்.