Thu. Apr 25th, 2024

தேர்தல் செலவுக்கு கொடுத்த ரூ 50 யிரத்தை வாங்க மறுத்துவிட்ட அரசியல் பிரமுகர்!

இப்படிப்பட்ட பழக்கமே இல்லை” என்று சொல்லிய தோழரை வியந்து பாராட்டிய அமைச்சர் சி.வெ.கணேசன்.!

சிறப்புச் செய்தி தகவல் :

மூத்த ஊடகவியலாளர் எம்.வி.ராஜதுரை


நெய்வேலி நகர திமுக முன்னாள் செயலாளர் எம். நாகலிங்கம் ( 90) வயது மூப்பு காரணமாக அண்மையில் இயற்கை எய்தினர். அவருடைய படத்திறப்பு விழா நெய்வேலியில் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம். ஆர். கே. பன்னீர்செல்வம் விழாவில் பங்கேற்று அவருடைய படத்தை திறந்து வைத்தார்.

விழாவுக்கு தலைமை ஏற்று, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி. வெ. கணேசன் உரையாற்றினார். தேர்தல் களத்தில் நாகலிங்கம் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், மற்றும் காங்கிரஸ் ,மதிமுக, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.ம. மு.க உட்பட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும், தி.க., தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு ,ஏஐடியுசி, உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர் .

தோழர் ஆறுமுகம்…..

அமைச்சர் கணேசன் பேசிக்கொண்டிருந்தபோது , நிகழ்ச்சிக்கு வந்திருந்த கடலூர் மாவட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆறுமுகத்தை குறிப்பிட்டு பொதுவாழ்க்கையில் இப்படிப்பட்டவர்களை வியந்து பார்ப்பதாகவும் தேர்தல் பணி செலவுக்காக அவரிடம் ரூ 50 ஆயிரம் தொகையை கொடுக்க முற்பட்டபோது அதை வாங்க மறுத்து “இப்படிப்பட்ட பழக்கமே தனக்கு இல்லை” என்று கூறிவிட்டதாகவும் சொல்லி அவரை அனைவர் முன்னிலையிலும் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.