Tue. Apr 30th, 2024

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பை ஏற்று வரும் பிப் 14-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி. கடந்த 19 ம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்து முதல்வர் பேசினார். அப்போது காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.. அதனை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் மோடி வரும் 14 ம் தேதி தமிழகம் வருகிறார்.. அன்றைய தினம் சென்னை வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் மோடி என்று தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த பயணத்தின் போது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என பா.ஜ.க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன..