Tue. May 7th, 2024

கொரோனா தொற்றிலிருந்து 1 மாத கைக் குழந்தையை குணமாக்கிய மருத்துவர்கள், கடவுளாக உயர்ந்து நிற்கிறார்கள்.. பெற்றோர்களையும், குடும்ப உறவுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்திய குடியாவின் அற்புதம் பற்றி பார்ப்போம்….

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பீரீத்தி அகர்வால் மற்றும் அங்கித் அகர்வால் தம்பதியினருக்கு கடந்த மாதம் குடியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து 25 நாட்களே ஆன நிலையில் திடீரென கொரியாவுக்கு காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டது.

பதைபதைத்துப் போன அவளின் பெற்றோர், குடியாவை மருத்துவமனையில் அனுமதித்து RTPCR பரிசோதனை மேற்கொண்டனர். அவர்கள் அச்சப்பட்ட மாதிரியே, குடியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

25 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்றுடன், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்களை அதிர்ச்சியிடைந்தனர். எனினும் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சைகளை தொடங்கினர்.

குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 10 நாட்கள் வெயிலில் வைத்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

பின்னர் சுவாசத்தில் முன்னேற்றம் ஏற்பட வென்டிலேட்டர் உதவியின்றி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடவுளின் அற்புதம் போல, குடியா, இயல்பு நிலைக்கு திரும்பியதைக் கண்டு அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கை கூப்பி நன்றி கூறினர்.

3 வார சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவை வென்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் குடியா. கொரோனோவில் இருந்து மீண்டு வந்த பச்சிளம் குழந்தையான மரியாவை, அவரது உறவினர்களால் முத்த மழை பொழிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர் என்ற சிறப்பைப் பெற்று மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் குடியா என்கிறார்கள் அவர்களுக்கு மனித உருவில் கடவுளாக மாறி சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.