Sun. May 5th, 2024

திருச்சி மாநகரில் அஞ்சல் வாக்குகளுக்காக காவல் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்த வழக்கு விவகாரத்தில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக அருண் ஐ.பி.எஸ்., நியமனம செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, மத்திய மண்டல ஐஜி ஆக இருந்த ஜெய்ராம், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக தீபக் எம் டாமர் ஐபிஎஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டல ஐஜி தினகரனும் மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு டாக்டர் ஏ.அமல்ராய் ஐபிஎஸ்., நியமனம் செய்யப்பட்டள்ளார்.

இந்த மாற்றத்தோடு, கோயம்புத்தூர் புறநகர் எஸ்.பி. அருளராசுவும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக செல்வநாகரத்தினத்தை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டள்ளது.