Sun. May 19th, 2024

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மீண்டும் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

போடி நாயக்கனூர் தொகுதி மட்டுமின்றி தேனி மாவட்டம் முழுவதும எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றியுள்ளார். இந்த மாவட்டத்திற்கு தொடங்கி வைக்கப்பட்ட புதிய வளர்ச்சித் திட்டங்கள் போல,வேறு எந்த மாவட்டத்திலும் இவ்வளவு வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படவில்லை.

உங்கள் மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடைதான் ஓ.பன்னீர்செல்வம்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழகத்தின் வெற்றி நடை தொடர, அதிமுக.வுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு முதல்வர் பேசினார். முன்னதாக, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் ஒருபோதும் அமைக்கப்பட மாட்டாது என்று உறுதிபட கூறினார்.