Sun. May 19th, 2024

பாலியல் தொந்தரவு புகாருக்கு உள்ளான தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ராஜேஷ் தாஸ், ஒரு சில மணிநேரங்களிலேயே அந்த பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். அவருக்கு வேறு எந்த பதவியும் தராமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

நேர்மைக்கு பேர் பெற்ற கூடுதல் டிஜிபி அந்தஸ்ததில், லஞ்ச ஒழிப்புத்துறை பதவி வகித்த ஜெயந்த் முரளி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டார். உடனடியாக அவர் பதவியேற்க உத்தரவிடப்பட்டதால், இரவு 7 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் ஜெயந்த் முரளி ஐபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.