Sun. Apr 28th, 2024

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் முதுகலை படிப்பில் வரலாறு பாடத்திற்கான தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வியும் அதற்கான விடையை தேர்வு செய்து எழுதும் வாய்ப்பாக, மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் என குறிப்பிடப்படிருக்கிறது.

மாணவர்களிடைய சாதி வேறுபாட்டை புகுத்தும் விதமாக கல்லூரி தேர்வில் சாதியைப் பற்றி கேள்வி எழுப்பியதற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ள கண்டனம் இதோ….

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் டிவிட்டர் பதிவு இதோ….

தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது!

வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது.

சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்!

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தமது டிவிட்டரில் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.