Sat. May 18th, 2024

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் இதோ…

பரதனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது ஓ.பி.எஸ். மனகசப்பில் இருக்கிறார். அவர், மீண்டும் சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம்.

அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்.

சசிகலா நலமுடன் உள்ளார். வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்..