Sat. Apr 20th, 2024

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது பாஜகவினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் பின்னணியில் பாஜக மேலிடத்தின் ஆதரவு இருப்பதாக ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை “ஜூதி படம்” (பொய் சொல்லும் படம்) என்று விமர்சித்த
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே போலீஸ் முன்னிலையில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் (பாஜக) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டெல்லி சட்டப் பேரவையில் பேசிய கெஜ்ரிவால், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை “ஜூதி படம்” (பொய் சொல்லும்) என்று கூறியிருந்தார் – அந்த படத்திற்கு பாஜக, மோடி தரும் தேவையற்ற முக்கியத்துவம் குறித்து விமர்சித்திருந்தார். இதை ஏற்று கொள்ள முடியாத பாஜகவினர் ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காமல் ரவுடிகளை ஏவி முதல்வர் வீட்டை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கடும் தெரிவித்துள்ள டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மேலும் கூறியதாவது: இந்த சமூக விரோத கும்பல் கெஜ்ரிவால் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தினர். மேலும், முதல்வர் வீட்டுக்கு வெளியே இருந்த பாதுகாப்புச் சுவரையும் உடைத்துள்ளனர். மேலும், நுழைவு வாயிலில் இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது என்றார்.

இந்தியாவில் அராஜக வழியில் தொடர்ந்து அரசியல் நிகழ்த்தி வரும் பாஜக இப்பொழுது ஒரு முதலமைச்சரையே தாக்க முற்பபட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.

இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் தொடர் வெற்றிகளை (பஞ்சாப்) பொறுத்து கொள்ள முடியாத பாஜகவினர் தற்பொழுது அராஜக அரசியலை கையில் எடுத்துள்ளது. இவர்களின் இந்த போக்கிற்கு இந்திய மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தை இந்திய மக்கள் தருவார்கள்.

கெஜ்ரிவால் வீடு பாஜக ரௌடிகளால் தாக்கப்பட்டதற்கு தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக பாஜகவினர்க்கும் அதன் பரிவரங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் டெல்லி பாஜகவினருக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு வசீகரன் தெரிவித்துள்ளார்.