Sat. Apr 20th, 2024

மதுரை மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தமிழக தலைவர் கே.அண்ணாமலை, வழக்கறிஞர்களின் சேவை மனப்பான்மையை வெகுவாக பாராட்டினார்.

வழக்கறிஞர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

கடந்த பல மாதங்களாக கட்சிக்காக பல்வேறு இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு முனைப்புடன் பணியாற்றிய வழக்கறிஞர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். மதுரை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் எதிர்கொண்ட பல்வேறு விவகாரங்களில் சட்டரீதியான உதவியை வழங்கியது மிகவும் வரவேற்புக்குரிய ஒன்றாகும்.

திமுக ஆட்சியில் பாஜக நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் புகார்களை சட்டத்தின் துணை கொண்டு முறியடிக்க, கடுமையாக உழைத்த வழக்கறிஞர்களின் பணி மிகவும் சிறப்புக்குரிய ஒன்று.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் சாதனைகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல, கடுமையாக களப்பணியாற்ற வேண்டும். முனைப்பாக களப் பணியாற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் அணி துணை நிற்க வேண்டும். அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு பாஜகவும், அகில இந்திய பாஜகவும் எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு கே.அண்ணாமலை உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.