Thu. May 9th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் இதோ….

இந்திய தூதர் பேட்டி

உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரி அளித்துள்ள பேட்டி விவரம்:

உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
இங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இங்கிருந்து துரிதமாக எடுத்து வருகிறோம்.
இன்று காலை போர் மூண்டது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வான்வழிப் போக்குவரத்து தரைவழிப் போக்குவரத்து என அனைத்து வழித்தடங்களும் முடக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களும் தங்களது இடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தொடர்ந்து இந்திய அரசுடன் அனைத்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் தூதரகம் செயல்பட்டு வருகிறது.
உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகள் வாயிலாக அனைவரும் விரைவில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள அனைத்து இந்தியர்களும் தாயகம் திரும்பும் வரை இந்த தூதரகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இவ்வாறு இந்திய தூதர் தெரிவித்தார்.