Fri. May 3rd, 2024

பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கோவையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

கோவை சின்னியம்பாளையம் அருகே தமிழக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு தேர்தல் கூட்டணி, பிரசார வியூகம் உள்ளிடடவற்றை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

பாஜக- அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை கூடிய விரைவில் நடைபெறும்.  இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள். அனைத்து மாவட்ட மக்களிடம் கருத்துக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இவ்வாற எல்.முருகன் கூறினார்.