Fri. May 3rd, 2024

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியாக பதவி வகித்து வந்த கராத்தே தியாகராஜன் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி அரசியல் கட்சி தொடங்குவர் என்று உறுதிபட தெரிவித்து வந்தார். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக அவர் அறிவித்தார்.

இதனையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணிக்கே தன்னுடைய ஆதரவு என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய அவர், அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலை திடீரென்று தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் எல் முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார்.

திருவான்மியூரில் நடைபெற்ற பா..ஜ.க. பொதுக்கூட்டத்தில், நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, கராத்தே தியாகராஜனுக்கு மாநில தலைவர் டாக்டர் முருகன், உறுப்பினர் அட்டையை வழங்கினார்.