Thu. May 9th, 2024

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிரசாத். வழக்கமான காவல் பணியில் இருந்தபோது, பட்டபகலில் திருடனை துரத்திப் பிடித்த நிகழ்வு, திரைப்படத்தை மிஞ்சிய சாகசம் போல அமைந்துள்ளது. கடை வீதியில் கார் திருடனை துரத்திப் பிடிக்கும் நிகழ்வு, அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. உயிரை பணையம் வைத்து கார் திருடனை துரத்திப் பிடித்த காவலர் பிரசாத்தின் துணிச்சலை டிஜிபி சைலேந்திர பாபு வெகுவாக பாராட்டியுள்ளார். அவருக்கு ரூபாய் 25 ஆயிரமும் வெகுமதி வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஐபிஎஸ்.ஸும் தனது டிவிட்டர் பக்கத்தில் காவலர் பிரசாத்தின் துணிச்சலான காவல் பணியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

கார் திருடனை துரத்தி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ள சிசிடிவி காமிரா காட்சிகள் முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. காவலர் பிரசாத்தின் தீரமிக்க பணியை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.