Sun. May 19th, 2024

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மான்ய கோரிக்கையை தாக்கல் செய்து பேசிய, அமைசசர் பி.கே.சேகர் பாபு, ஒருகாலப் பூஜைத்திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவுவடைவதற்கு முன்பாக அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்வில் பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் செயல்பாட்டை பெரிதும் பாராட்டினார்.

அதன் விவரம் :