Thu. May 9th, 2024

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் என்ற பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் மேம்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் ரூ.317 கோடி மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார். தமிழக அரசின் இந்தஅறிவிப்புக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அகதிகள் முகாம் என்று அழைப்பதை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தநிலையில், அகதிகள் முகாம் என்ற பெயர் மாற்றப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: