Thu. May 9th, 2024

கோட நாடு கொலை மற்றும் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய மேல் விசாரணை நடத்துவதில் தவறில்லை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

கோட நாடு கொலை மற்றும் கொலை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தத்தம் வாதங்களை எடுத்து வைத்தனர்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், கோட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாகிளை கண்டறிய மேல் விசாரணை நடத்துவதில் தவறில்லை என்று கூறி, தடை கேட்டு மனுதாரர் தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை செப் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணை வழக்கம் போல உதகை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர்கள், கோட நாடு எஸ்டேட் பங்களாவுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.