Wed. May 8th, 2024

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.

நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைக்க உள்ளார்.

ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றும் உரையைப் பேரவைத்தலைவர் தனபால் தமிழில் வாசிப்பார்.

அதைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதன் பின், அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும்.