Mon. Apr 29th, 2024

தே.மு.தி.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது..இதில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக கூறப்படும் தகவல் இதோ…

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிடில் தனித்துப்போட்டியிட தயாராக இருக்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட தயார்.

கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று பொங்கியுள்ளார் பிரேமலதா..

போன சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்டு எங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டார் கேப்டன்.. இந்த தேர்தலில் அடைந்தால் மகாதேவி என்ற கணக்காக 40 தொகுதியில் குறி நிற்கிறார்.. ஆக மொத்தத்தில் திமுகவும் இல்லை..அதிமுகவும் இல்லை.. நடுத்தெருவில் நிறுத்தப் போகிறார் என புலம்பியவாறே ஊருக்கு புறப்பட்டனர் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்..

பேசியே கெடுத்தார் ரஜினி.. பேசாமல் கெடுக்கிறார் விஜயகாந்த்.. பாவம் அவரது ரசிகர்கள்…