Wed. Apr 24th, 2024

சென்னை ஐஐடி யில் பணியாற்றிய திட்ட ஆலோசகர் தற்கொலைக்கு முன்பாக எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். .

சென்னை ஐஐடி வளாகத்தில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் உன்னி கிருஷ்ணன் என்பதும், வேளச்சேரியில் தங்கி ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

அவர் தங்கியிருந்த அறையில் காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், “நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கே தெரியவில்லை. மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதம் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கேரளாவில் பிடெக் பட்டம் பெற்ற உன்னிகிருஷ்ணன், ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக இருந்துள்ளதாக தெரிகிறது. சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோலை எடுத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன், தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவருடன் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், சாதிய ரீதியான பாகுபாடே உதவிப் பேராசிரியர் தற்கொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள மதுரை எம்.பி. வெங்கடேசன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உரிய விசாரணையை நடத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து இதோ…..