Sun. May 19th, 2024


நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று லடாக்கிற்கு சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜ்நாத் சிங்

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக லடாக் சென்றார். லடாக் எல்லையில் பிஆர்ஓ எனப்படும் எல்லை சாலைக் கட்டமைப்பு நிறுவனத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்புப் பணிகளை ராஜ்நாத் சிங் பார்வையிடவுள்ளார். சீனாவுடன் லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சினை முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அவர், ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடினார். அவர் பேசியதாவது:-

நாடும் உங்களை பாதுகாக்கும்

நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப் போல் நாடும் உங்களை பாதுகாக்கும். அதுவே எங்கள் நோக்கம். ராணுவ வீரர்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர ஒரு இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.