Sat. May 18th, 2024

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்துவது, அதனை கண்காணிப்பது, அரசுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, கொரொனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் நியமனம் செய்து, அதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ, டாக்டர் எழிலன், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் (அதிமுக) உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். அதன் முழு விவரம் வருமாறு ;