Fri. Apr 19th, 2024

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 30,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 6,991 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சை முடித்து 19,297 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், 297 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 14,99,485 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 12,98,945 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் மொத்தம் 4,19,261 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனோ தொற்றால் தமிழகம் முழுவதும் இன்று வரை 16,768 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் தான் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், அங்கு தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனோ பரவுதல் குறையால் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்றைக்கு 30 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு அதிகரித்துவிட்டது.