Tue. May 21st, 2024

புதிய அரசு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதையடுத்து, மே 11ல் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டபேரவைக் கூட்டத்தில், தேர்தலில் வெற்றிப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.

பேரவையின் மூத்த உறுப்பினர் தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பு ஏற்று, புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து மறுநாள் (12-ந் தேதி) பேரவைத் தலைவர் மற்றும் துணை பேரவைத்தலைவர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும். பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிப் பெற்றிருப்பதால், போட்டியின்றியே இருவரும் தேர்வு செய்யப்படுவார்கள்.

சட்டப்பேரவை கூடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ….