Mon. Jun 9th, 2025

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தனது கணவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளுக்கும் நன்றி தெரிவித்தார்

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசினார், விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவர் கூறியதாவது:

எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு தமிழக அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி.

இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அருள்செல்வி கண்ணீர் மல்க கூறினார்.