Sun. May 19th, 2024

கொரோனோ தொற்று அச்சத்தால், தடைபட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்றைய தினம் மீண்டும் தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தொடங்கியது.

இரண்டாவது நாளாக இன்றும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல நடிகை நயன்தாரா, இன்று மாலையில், ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு தனி விமானத்தில் பறந்தார்.
தமிழகத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவதைப் போல, கேரளாவில் மலையாள மாத ஆண்டின் முதல் மாத விஷு விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. மலையாள புத்தாண்டாக அம்மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். நயன்தாரா கிறிஸ்துவர் என்றாலும், சிவன் இந்துவாக இருப்பதால், அவரின் மத நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்கும் வகையிலும் விஷு மலையாள புத்தாண்டை இருவரும் கேரள மண்ணில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள்.
அதில் கலந்துகொள்வதற்காக படப்பிடிப்பில் இருந்து விடுமுறை பெற்றுக் கொண்டு கொச்சின் திரும்பியுள்ளார். அவருடன் அவரது இன்றைய காதலனும், நாளைய கணவருமான விக்னேஷ் சிவனும் ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் நயன்தாராவுடன் பயணம் செய்தார்.
ஐதராபாத் மற்றும் கொச்சின் விமான நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் நயன்தாராவை ஆசை தீர பார்ப்பதற்காக, விமான பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பயணிகள் ஆர்வமாக, நயன்தாராவை நெருங்கி சென்றனர். அவர்களை அருகில் நெருங்க விடாமல் நயன்தாராவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார் விக்னேஷ் சிவன்..

. விஷு விழா விடுமுறைக்கு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பிலும், காத்து வாக்கில் ரெண்டு காதல் என்ற படத்திலும் பிஸியாகிவிடுவார் நயன்தாரா என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா. இருவரும் இணைந்து நடிக்கிற சில காட்சிகள் இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவை அடிக்கடி ரஜினி கிண்டலடித்து பேசுவதால் படப்பிடிப்பு தளமே கலகலவென இருக்கும். இப்போது நயன்தாரா கொச்சின் கிளம்பி விட்டார். 4, 5 நாட்கள் கழித்துதான் அவர் ஐதராபாத் திரும்புவார். அதுவரை படப்பிடிப்பு தளம் வெறுமையாக தான் இருக்கும்.

ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டால் கூட, படப்பிடிப்பு தளம் செம ஜாலியாக இருக்கும். ரஜினியோடு சேர்ந்து அவர் நடிக்கிற காட்சிகள் எப்போது வரும் என்று காத்திருப்பதாக கூறுகிறார்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள திரைப்பட துறை பணியாளர்கள்…