Sun. May 19th, 2024

மேட்டுப்பாளையத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் தான் உள்ளது என்பது உலகளவில் பரவியிருக்கும் உண்மையாகும். டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆளும்fட்சியாக இருக்கும் நிலையிலேயே பெண்களுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதை நாடு முழுவதும் உள்ள மக்களே நன்றாக அறிவார்கள். அப்படிபட்ட மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், புனிதராக மாறி தி.மு.க பற்றியும் தமிழ்நாட்டை பற்றியும் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ,
தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலையோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையும் ஒன்று சேர்ந்திருப்பதால் தமிழகம் முழுவதும் பாஜக, அதிமுக.வுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை, பிரசாரத்திற்காக செல்லும் போது எல்லா ஊர்களிலும் பார்க்க முடிகிறது.
தாராபுரத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசிய பிரதமர் மோடி, பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது ஆளும் அதிமுக நிர்வாகிகளால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து பிரதமர் மோடி வாயே திறக்கவில்லையே, அது ஏன்? இப்படிபட்ட நிலையில், பிரதமரும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தமிழகத்தில் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவதற்கு எந்த தகுதியும், யோக்கியதையும் இல்லை.