Sun. May 5th, 2024

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா ஆகியோரின் தரக்குறைவான தனிமனிதருக்கு எதிரான விமர்சனத்தை குறிப்பிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது : கிராமத்திலிருந்து ஒரு விவசாயி முதலமைச்சராக இருப்பது பிடிக்காமல் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். என்னை கொச்சைப்படுத்தி பேசுவதாக நினைத்துக் கொண்டு எல்லா விவசாயிகளையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

திமுகவினர் என்றாலே நிலங்களை அபகரிக்கக்கூடியவர்கள். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால் திமுகவினருக்கு தெரியப்படுத்தாதீர்கள். அவர்கள் அதனை அபகரிக்கக்கூடும். திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அம்மாவின் அரசு மக்களுக்கு மீட்டு வழங்கியுள்ளது.

எனது மறைவுக்குப் பிறகும் அதிமுக ஆட்சி 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா சூளுரைத்தார். அவரின் லட்சியத்தை நிறைவேற்ற எனது உயிரைக் கொடுத்தாவது அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்க பாடுபடுவேன்.

இவ்வாறு முதல்வர் இ.பி.எஸ். உருக்கமாக பேசினார்.