Sun. May 5th, 2024

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விலையில்லா 6 கேஸ் சிலிண்டர், சோலார் மின்அடுப்பு, வாஷிங் மெஷின் ஆகியவை வழங்கப்படும்.

சாமானிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், 100 நாள் வேலை திட்டம் இனி 150 நாட்களாக உயர்த்தப்படும்.

சாமானிய மக்களுக்கான அரசாக என்றும் அதிமுக அரசு இருக்கும்.

திமுக என்றால் அராஜக கட்சி, அதிமுக என்றால் அமைதி கட்சி.

மீண்டும் ஆட்சி அமைப்போம் அமைதியான தமிழகத்தை உருவாக்கிடுவோம்.

திமுக ஆட்சியில் அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. அதனால்தான் அவர்களால் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்ய முடியவில்லை.

நாங்களே இடத்தை தேர்வு செய்து மேடை அமைக்கின்றோம். இருவரும் (மு.க.ஸ்டாலின்)நேருக்கு நேர் விவாதிக்கலாம்.

அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் மக்களிடம் உங்கள் பொய்கள் சுக்குநூறாகும்.

குற்றச்சாட்டுகளில் உண்மை, பொய் எதுவென்று அறிந்து நீதிபதிகளான மக்களே முடிவு செய்யட்டும் மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு.

என்னை போலி விவசாயி என்று கேலி, கிண்டல் பேசுகிறார் திமுக தலைவர். அவருக்கு நான் சவால்விடுகிறேன். என்னை மாதிரி விவசாய நிலத்தில் இறங்கி நாற்று நட முடியுமா? களை எடுக்க முடியுமா? என்னுடைய சவாலை மு.க.ஸ்டாலின் ஏற்பாரா?

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.