Sun. May 5th, 2024

சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் விவரம் இதோ…


தமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டி தான் காரணம். இதனால் தமிழகத்தின் தொழில்வளம் குன்றிவிட்டது.

கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த கூட்டத்திற்கு இந்த தேர்தலில் முடிவுக்கட்டுவோம். 

கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த கூட்டத்திற்கு இந்த தேர்தலில் முடிவுக்கட்டுவோம். 
மே 2ம் தேதி தேர்தல் முடிவுகளில் திமுக ஆட்சி என்பது உறுதியாகும்.

எங்கள் அரசு, உங்கள் கவலைகளை, கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும். ஸ்டாலினாகிய நான் மக்களின் விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும் இருப்பேன். 

சீர்மிகு சென்னையை அசுத்தமாக மாற்றிவிட்டனர். சென்னை மாநகராட்சியில் எங்குபார்த்தாலும் குப்பையாக காட்சியளிக்கிறது. அதனை அப்புறப்படுத்தாமல், இந்த குப்பை அரசு, குப்பைக்கு வரிப்போட்டது. நான் எதிர்த்ததும் அதனை வாபஸ் பெற்றனர். மாஸ்க், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி கொள்ளை அடித்தனர்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.