Mon. May 6th, 2024

1984 ல் தமிழகத்தையே கலக்கிய திரைப்படம் முந்தானை முடிச்சு. அந்த படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் சமாச்சாரம், இன்றைக்கு 50 வயதை கடந்தவர்களுக்கு கிளுகிளுப்பான விஷயமாக அன்றைய காலத்தில் இருந்தது.

1990 களில் இயக்குனராகவும், கதாநாயகனாகவும் கே. பாக்யராஜ், திரையுலகில் கொடி கட்டி பறநதுகொண்டிருந்தார்.அவரின் ஒவ்வொரு படமும், ரசகிர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. குறிப்பாக பெண்களிடம் கே.பாக்யராஜுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அதுவே, அவரது படங்கள் பிரம்மாண்டமான வெற்றி பெற வழிவகுத்தது.

37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ கே. பாக்யராஜின் ” முந்தானை முடிச்சு ” புதிய வடிவத்தில் கோலிவுட்டை கலக்க வருகிறது.

கே.பாக்யராஜ் நடித்த கதாநாயகன் வேடத்தில் பிரலப நடிகர் சசிகுமார்ரும், ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள்.

வெற்றிப் படங்களை தந்த , எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பெரும் வெற்றியடைந்த
“சுந்தரபாண்டியன்”, விரைவில் திரைக்கு வரவுள்ள “கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களுக்கு பிறகு மீண்டும் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் இணையும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்க படுவார்கள் என தயாரிப்பாளர் JSB சதீஷ் தெரிவித்தார்.