Sun. May 19th, 2024

தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

கடந்த 16.11.2020 , திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த 20.01.2021 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும் , பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் , பெயர் நீக்கம் செய்திடவும் வருகின்ற 25.02.2021 , 26.02.2021 ஆகிய 2 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் , காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

01-01-2021 அன்று 18 வயது பூர்த்தியடையும் , புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை முதல் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் பெயரை பதிவு செய்ய, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

நாளையும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.