Sat. May 18th, 2024

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிட அறிவுசார் பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உப்ட ஏராளமானோர் கலந்துகொண்டர். தொடர்ந்து அதே வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ மெழுகு சிலையையும் திறந்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவரது பிறந்தநாளான இன்று பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படவில்லை.