Sat. May 4th, 2024

முந்தைய அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அதிகார துஷ்பிரயோகம் செய்து 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அவரது வீடு மற்றும் தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல் தகவல் அறிக்கை மற்றும் விசாரணை விவரம்: