Thu. May 2nd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் ஆண்டில் மூத்த அமைச்சர்கள் முதல் ஜுனியர் அமைச்சர்கள் வரை பெரும்பான்மையானோரின் ஆதங்கம், தத்தம் துறையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பே வழங்குவதில்லை, தங்கள் சொல் பேச்சையும் கேட்பதில்லை, முதல் அமைச்சரின் செயலாளர்களின் உத்தரவுகளுக்குதான் கட்டுப்படுகிறார்கள் என்று புலம்பி வந்தனர்.

அவர்களின் மனக்குறையை போக்கும் வகையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை செயலாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்களோடு இணைந்து செயலாற்றுங்கள் என துறைச் செயலாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகவே அறிவுரை வழங்கியுள்ளார் என்கிறார்கள் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான அரசு அலுவலர்கள்.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற அனைத்து அரசுத் துறைச் செயலாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ…

கள அளவிலான ஆய்வுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்…