Sun. May 5th, 2024

பேரறிவாளனை விடுதலை செய்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி தத்துவத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் முழுவிவரம் இதோ…

பேரறிவாளன் விடுதலைக்காக முழுமையான முயற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை கைபேசி மூலம் தொடர்பு கொண்ட தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன், அற்புதம்மாள் சந்திப்பு…

கோவை செல்வதற்காக விமானம் நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, விருந்தினர்களுக்கான ஓய்வறையில் பேரறிவாளன்,அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். விடுதலை கோரும் வழக்கில் தமிழக அரசும், தனிப்பட்ட முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட குடும்பத்தினர் நெஞ்சம் நெகிழ நன்றிகளை முதல்வருக்கு தெரிவித்தனர்.