Mon. May 6th, 2024

கலைமாமணி விருதுக்கு தேர்வுப் செய்யப்பட்ட நடிகர்களில் சிவகார்த்திகேயன், அந்த விருதுக்கு அளித்த மரியாதையே தனி ரகம்.. பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக, முதல்வர் பழனிசாமியிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன், நேராக தனது தாயாரைச் சந்தித்து நெகிழ்ச்சி பொங்க ஆசி பெற்றுள்ளார். அவரின் காலில் சாஷ்டங்கமாக விழுந்து, தனக்கு கிடைத்த விருதை காணிக்கையாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமாகவும் பதிவிட்டுள்ளார். அதில்,

சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி

Folded hands

தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று உள்ளம் உருக பதிவிட்டுள்ளார், சிவகார்த்திகேயன்..

தாயிற் சிறந்த கோவிலுமில்லை …….