Mon. May 20th, 2024

சட்டப்பேரவையில் இன்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசின், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த விவகாரத்தை எழுப்பி பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வானதி சீனிவாசனுக்கு சுடச்சுட பதிலளித்தார்.

அதன் முழு விவரம் இதோ:

வானதி சீனிவாசன் விளக்கம்

சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதிலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

பிராமண சமூக மக்களை வைத்து வெறுப்பரசியல் செய்யலாம் . ஆனால் அந்த சமூக மக்கள் பிரச்சினையைப் பேசினால் ஜாதியை குறிப்பிடக்கூடாது எனத் தடை . இது ” நவீன தீண்டாமை ” இல்லையா??

இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.