Sat. May 18th, 2024

வியாழக்கிழமை (நாளை) அதிகனமழை பெய்ய இருப்பதால் மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

குடிநீர், பால், உணவு காய்கறிகளை இரண்டு நாட்களுக்கு தேவையான அளவிற்கு வாங்கி இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

நீர்நிலைகள், கால்வாய்கள் மழைநீர் தேங்கி இருக்கும் இடத்தில் மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தெருவிளக்கு மின்கம்பங்கள், மின் இணைப்பு பெட்டிகளை தொடுதல் மற்றும் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

தொடர்பு எண்கள்;

மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை(நவ 18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (நவ. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் சென்னையில் நாளை(18.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை (நவ.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..