Thu. Apr 25th, 2024

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு:

மயிலாடுதுறை மாவட்டம் சீனிவாசபுரம் என்ற இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அதில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்தது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகர் சூர்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.

இதனால் மேற்படி பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.