Wed. Apr 24th, 2024

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் மாமண்டூர் கிராமத்தில் பாலாற்றில் குளிக்கச் சென்று எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட 7 இளைஞர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையின் துரித நடவடிக்கையால் மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் உயிருடன் மீட்டனர்

வெள்ள நீரில் சிக்கிக் கொண்ட இளைஞர்களை காப்பாற்றிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதிவேகமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஆர் காந்தி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

மாமண்டூர் ஊராட்சி பாலாற்றில் இன்று மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 7 நபர்கள் பிற்பகல் குளிக்கச் சென்று கரையோரம் குளிக்கச் சென்று குளித்து கொண்டிருந்தனர் எதிர்பாராதவிதமாக அனைவரும் வாலாட்டி செல்லும் வெள்ள நீரில் சிக்கி கொண்டு அடித்து செல்லப்பட்டு ஆற்றின் நடுவே உள்ள பாறையில் ஓரம் ஒதுங்கி பாறைமேல் அமர்ந்துகொண்டனர் இதனைத்தொடர்ந்து தாங்கள் வெளியே பலரை விட்டு வெளியே வரமுடியவில்லை என தங்களை உயிருடன் காப்பாற்ற வேண்டுமென்று இளைஞர்கள் கூச்சலிட்டனர் இந்த தகவலை கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது இவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அதற்கு இந்த தகவல் அதற்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் சென்றுவிட்டது உடனே மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தார் அதற்குள்ளாகவே மாவட்ட தீயணைப்பு துறையினருக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்து குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாமண்டூர் மேம்பாலம் அருகே இறங்கி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தின் மூலம் சுமார் 1 கிலோ மீட்டர் கொடி வழியில் சென்று இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் சிக்கியுள்ளது பார்த்தார்கள் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்ட தீயணைப்புத்துறையினர தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருவதற்கு அரை மணி நேரம் எடுத்துக் கொண்டது அதுவரையும் இளைஞர்களுக்கு கரையிலிருந்து போதிய அறிவுரைகள் வழங்கி வந்தார்கள் இந்த நேரத்தில் மழை பொழியும் தொடங்கி அதிகளவு மழை பொழிவு பெய்து கொண்டிருந்தது இந்த மழை பொழியும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வருவாய் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தொடர்ந்து உத்தரவிட்டு கொண்டிருந்தார்கள் தீயணைப்புத்துறையினர் வந்த பின்பு மீட்பு பணியை தொடங்கி கொண்டிருந்தனர் அதற்கு பின்பு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்தனர் இந்த தகவல்கள் உடனுக்குடன் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களின் பார்வைக்கு சென்றது தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்களும் ராணிப் பேட்டையில் இருந்து உடனடியாக கிளம்பி சம்பவ இடத்திற்கு வருகை புரிந்தார்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் நடந்து சென்று அந்த இடத்திற்கு கரையோரம் இடத்திற்கு சென்று அடைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து பாலாற்று நடு ஆற்றில் சிக்கி கொண்டு இருந்தவர்களை படகு அமைத்து சென்று அவர்களை ஒவ்வொருவராக மீட்டு படகில் ஏற்றி கொண்டு வந்து கரை சேர்த்தனர் அப்போது பாலாற்றில் வெள்ளம் சுமார் 10 ஆயிரம் கன அடி அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த அதிவேக வெள்ள நீரிலும்இளைஞர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு தகவல் தெரிந்து விரைவாக அரை மணி நேரத்திற்குள்ளாகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மீட்பு பணிகளை விரைவு படுத்தியுள்ளார்கள் மேலும் வருவாய் துறையினரும் இந்த தகவலைத் தொடர்ந்து தகவல்களை தெரிவித்து வந்துள்ளனர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு மறையும் பொருட்படுத்தாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட நிர்வாகம் வருவாய் துறையினர் தேசிய பேரிடர் மீட்பு தீயணைப்புத்துறையினர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் செயலாற்றி இந்த இளைஞர்களை உயிருடன் மீட்டுள்ளனர் இந்த மிகப் பெரிய காரியத்தை உடனுக்குடன் செய்து ஏறுது இளைஞர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நிம்மதியை அளித்தது மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் துறை உள்ளிட்ட அனைவருக்கும் மாண்பு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.