Sun. May 5th, 2024

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கல்விக் கட்டண முரண்பாடுகளை நீக்கி, நியாயமான கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து இதோ:

சிதம்பரம் இராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டில் சேரும் மாணவர்களுக்கு அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது இது நியாயமல்ல!

ஒரே கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.13,610 கட்டணம் செலுத்தும் நிலையில், 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் ரூ.4 லட்சமும், அதற்கு முன் சேர்ந்தவர்கள் சில ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம், சில ஆண்டுகளுக்கு ரூ.5.44 லட்சம் செலுத்துவது என்ன நியாயம்?

ஏற்கனவே சேர்ந்த மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு மட்டும் தான் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அரசுக்கு இது பெரும் சுமையல்ல. இந்த சுமையையும் அரசு ஏற்றுக் கொண்டு, மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.13,610 ஆக குறைக்க வேண்டும்!

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.