Sat. May 18th, 2024

புலம்பெயர்ந்த தமிழர் நலம் வாரியம் அமைக்கப்படும் என்றும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூபாய் 20கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்” என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

“இந்த வாரியத்தின் நோக்கங்கள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் மற்றொரு முக்கியமான ஒரு திட்டத்தை இணைத்துக்கொள்ள வேண்டுமென முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும்பாலோர் தமிழர்களாக வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில்கூட இந்தியத் தூதுவர்களாகத் தமிழர்களை இந்திய அரசு நியமிப்பதில்லை. நீண்டகாலமாக நிலவும் இந்தக் குறை போக்கப்படவேண்டும். தமிழக அரசு நேரடியாகப் பிற நாடுகளுக்குத் தூதுவர்களை நியமிக்க இயலாது. எனவே, மேற்கண்ட நாடுகளில் செல்வாக்குப் படைத்த தமிழர்களைத் தேர்ந்தெடுத்து இந்த வாரியத்தின் கவுரவத் தூதுவர்களாக நியமிக்கவேண்டும். அந்நாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகள், குறைகள் போன்றவற்றை இவர்கள் மூலம் அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.